Atmanandalahari

Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit.
எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .

Listen on:

  • Podbean App

Episodes

Thursday Sep 11, 2025

அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே. 
தேஹம் வேறு  - தேஹி வேறு  என்ற அறிவு . உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா.
இதை உணர்த்த நாள் தோறும் அனுபவிக்கும் மூன்று அவஸ்தை நிலைகளை உதாரணமாக விளக்குகிறார்.  விழிப்பு நிலை, கனவு நிலை,  உறக்க நிலை இதை உடலுக்கு வேறாக ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே உணரமுடிகிறது 

Thursday Sep 04, 2025

சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன்  குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன்  -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான். 
ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி குளவியாய் மாறுகிறதோ அது போல் ஜீவா பரமாத்மாவாகிறான். 

Thursday Aug 28, 2025

சிஷ்யன் குருவை வணங்கி ஆத்ம ஞானம் வேண்டும் என்று கேட்டல்,  குரு சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை மூலம் ஆறுதல் அளித்தல், சிஷ்யன் தகுதியை உணர்த்தி  குருவை சரணடைதல். 

Wednesday Aug 20, 2025

நான்கு தகுதிகள் உடையவருக்கு அறிவு உண்டாகும். சிஷ்யனுக்கு உரிய தகுதிகளுடன், அத்யாத்மிக ஆதிதைவிக ஆதிபௌதிக துன்பங்களில் இருந்து விடுபட குருவை அணுகுதல். 

Thursday Aug 14, 2025

தத்துவ விளக்கப் படலம் 
பாடல் 1-3
ஞானம் பெறுவதற்கான தகுதிகள் -விவேகம், வைராக்யம் , சமதம ஆறு கூட்டம், முக்தி அடைய அவா. 

Thursday Aug 07, 2025

கைவல்ய நவநீதம் நூலினால் என்ன பயன்? 
பாயிரம் 6
படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல்,
குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக்,
கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை,
அடைந்தவர் விடய மண்தின்று அலைவரோ பசியி லாரே.
 

Wednesday Jul 30, 2025

என்னுடை மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம்,
என்னுடை அறிவி னாலே இரவிமுன் இமமே ஆக்கி, 
என்னுடை நீயும் நானும் ஏகமென்று ஐக்கியம் செய்ய,
என்னுடைக் குருவாய்த் தோன்றும் ஈசனை இறைஞ்சி னேனே.
Maha Vakya - Tat Tvam Asi is explained in this verse

Sunday Jul 20, 2025

பாடல் -2 & 3
சகுண ஈஸ்வர உபாசனை 
குரு நமஸ்காரம்
 

Tuesday Jul 15, 2025

மோட்சம் என்றால் என்ன? கர்மா, பக்தி, ஞாநம் -விளக்கம் 
பாயிரம்-1
பொன்னிலம்  மாதர்  ஆசை பொருந்தினர் பொருந்தார்  உள்ளந்   
தன்னில் அந்தரத்தில் சீவசாட்சி மாத்திரமாய் நிற்கும், 
எந்நிலங்களிலும்  மிக்க எழு நிலம்  அவற்றின் மேலாம், 
நன்னிலம்  மருவும் ஏக நாயகன் பதங்கள் போற்றி!
 

Thursday Jul 10, 2025

கைவல்ய நவநீதம் -குரு வந்தனம் முன்னுரை
இது ஒரு சார்பு நூல். சாஸ்திரத்தில் சொல்லப்பட்டதை இன்னொரு நூலாக எழுதுவது.  எழதியது - தாண்டவராய சுவாமிகள். மனிதப் பிறவியின் நோக்கம் உண்மையை உணர்தல். நான் யார் என்ற  உண்மையை உணரவேண்டும். எல்லாம் பிரம்மமே என்று அறிவதே அறிவு. 

Copyright 2025 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125