Atmanandalahari
Self is absolute existence, absolute knowingness and absolute happiness. The real nature of self is Sat, Chit, Ananda. Let us explore the ancient scriptures, Upanishads, Bhagavad Gita, Brahma Sutra and Prakarana Granthas as taught by our teachers in this podcast. Let the light of knowledge remove the darkness of ignorance for everyone. Let the plurality, duality be dismissed and absolute oneness be understood. This will be a multilingual podcast with episodes in English, Tamil and Sanskrit.
எங்கும் நிறைந்த இருப்பாய், மங்காத சித்தாய் பொங்கும் ஆநந்த பொலிவான மெய்ப்பொருளை, ஆத்மாவை, தங்கு தடையில்லா தத்துவத்தை, இரண்டற்ற ஒன்றான அத்வைத கருத்துக்களை இந்த வலையொலிப் பதிவில் பகிர்ந்துகொள்வோம். உபநிடதங்கள், பகவத் கீதை, ப்ரம்மசூத்ர கருத்துக்களையும், வேதாந்த நூல்களையும் ஆராய்வோம். வாழையடி வாழையாய் வந்த இந்த அறிவொளியில், அறியாமை இருள் அகலட்டும். இந்த வலையொலி ஆங்கிலம், தமிழ், மற்றும் வடமொழியில் ஒலிக்கும் .
Listen on:
Episodes

Sep 25, 2025
Sep 25, 2025
35 min
The Adyāropa Apavāda method of explained with examples like- Seeing snake in rope/ Seeing man in post/ Seeing mirage/ Seeing blueness in sky.
The truth that is with a name or form, the one that is same, the one without second, sentience, light that is full without any blemishes.
The difference between Brahman and Maya is highlighted and the manifestation of cosmos is discussed.
Brahman
Maya
Satyam
Mithya
Nirvikara
Savikara
Nirguna
Saguna
Chetanam
Jadam
samam
Vishamam
Aparinami
Parinami

Sep 18, 2025
Sep 18, 2025
37 min
மரக்கிளை நிலவு நியாயம் , அருந்ததி தர்சன நியாயம் - தெரிந்ததைக் கொண்டு தெரியாததைக் காட்டுதல்.
அத்தியாரோபம்/ அபவாதம் யுக்தி மூலம் பிரம்மன் சத்தியம் உலகம் மித்யா என்று விளக்குதல்
கயிறு பாம்பாகத் தெரிதல், கட்டை மனிதனாகத் தெரிதல், கானல் நீராகத் தெரிதல், வானம் நிறமுடையதாகவும் நிலமுடையதாகவும் தெரிதல் போன்ற உதாரணங்களை சொல்லி குரு விளக்குகிறார்.

Sep 11, 2025
Sep 11, 2025
30 min
அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே.
தேஹம் வேறு - தேஹி வேறு என்ற அறிவு . உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா.
இதை உணர்த்த நாள் தோறும் அனுபவிக்கும் மூன்று அவஸ்தை நிலைகளை உதாரணமாக விளக்குகிறார். விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை இதை உடலுக்கு வேறாக ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே உணரமுடிகிறது

Sep 4, 2025
Sep 4, 2025
35 min
சூழல் காற்றில் சுற்றும் குப்பை போல திரியும் ஜீவன் குருவை சரணடைகிறான் . ஆத்ம ஞாநம் கற்று கொள்ள வேண்டிய தகுதிகளுடன் -தவம் , பக்தி, கேட்க ஆசை, ஸ்ரத்தாவுடன் அவன் கேட்கிறான்.
ஆத்ம வித்தை கேட்க ஆரம்பித்தாலே சம்சாரக் கடல் வற்ற தொடங்கிவிடும்.புழு எப்படி குளவியாய் மாறுகிறதோ அது போல் ஜீவா பரமாத்மாவாகிறான்.

Aug 28, 2025
Aug 28, 2025
40 min
சிஷ்யன் குருவை வணங்கி ஆத்ம ஞானம் வேண்டும் என்று கேட்டல், குரு சங்கல்ப தீக்ஷை, சக்ஷு தீக்ஷை, ஸ்பர்ச தீக்ஷை, ஞானதீக்ஷை மூலம் ஆறுதல் அளித்தல், சிஷ்யன் தகுதியை உணர்த்தி குருவை சரணடைதல்.

Aug 20, 2025
Aug 20, 2025
40 min
நான்கு தகுதிகள் உடையவருக்கு அறிவு உண்டாகும். சிஷ்யனுக்கு உரிய தகுதிகளுடன், அத்யாத்மிக ஆதிதைவிக ஆதிபௌதிக துன்பங்களில் இருந்து விடுபட குருவை அணுகுதல்.

Aug 14, 2025
Aug 14, 2025
53 min
தத்துவ விளக்கப் படலம்
பாடல் 1-3
ஞானம் பெறுவதற்கான தகுதிகள் -விவேகம், வைராக்யம் , சமதம ஆறு கூட்டம், முக்தி அடைய அவா.

Aug 7, 2025
Aug 7, 2025
29 min
கைவல்ய நவநீதம் நூலினால் என்ன பயன்?
பாயிரம் 6
படர்ந்தவே தாந்த மென்னும் பாற்கடல் மொண்டு முன்னூல்,
குடங்களில் நிறைத்து வைத்தார் குரவர்க ளெல்லாங் காய்ச்சிக்,
கடைந்தெடுத்து அளித்தேன் இந்தக் கைவல்ய நவநீதத்தை,
அடைந்தவர் விடய மண்தின்று அலைவரோ பசியி லாரே.

Jul 30, 2025
Jul 30, 2025
32 min
என்னுடை மனது புத்தி இந்திரிய சரீரம் எல்லாம்,
என்னுடை அறிவி னாலே இரவிமுன் இமமே ஆக்கி,
என்னுடை நீயும் நானும் ஏகமென்று ஐக்கியம் செய்ய,
என்னுடைக் குருவாய்த் தோன்றும் ஈசனை இறைஞ்சி னேனே.
Maha Vakya - Tat Tvam Asi is explained in this verse

Jul 20, 2025
