Saturday Dec 20, 2025

கைவல்ய நவநீதம் -18

நடக்காததை நடந்தது போல் காட்டும் 

இல்லாத உலகை இருப்பதாய்க் காட்டும் 

கயிற்றை பாம்பாக்கி பயத்தைக் காட்டும்  

இல்லாத வெள்ளியாய் சிப்பியும் மின்னும் 

ஜீவனாய் ஜனமாய் ஈசனாய்க் காட்டும் 

 

இல்லாத பந்தத்தால் இறுகவே கட்டும் 

ஒன்றைப் பலவாக்கி உருவங்கள் காட்டும் 

இருப்பை வைத்தே இயங்கி நிற்கும் 

அநாதி காலமாய் ஆழிமழை பொழியும் 

ஆகாயம் போலவே நீ நனையாது நிற்பாய் 

மாயை என்பதே மாயை எனஅறிவாய் 

எழுவாய்! விழிப்பாய்! உண்மையை அறிவாய்!

சத்தாய் சித்தாய் ஆனந்தமாய் இருப்பாய்! 

 

Comment (0)

No comments yet. Be the first to say something!

Copyright 2025 All rights reserved.

Podcast Powered By Podbean

Version: 20241125