
Thursday Sep 11, 2025
கைவல்ய நவநீதம் -10
அறிவதும் அறியப்படுவதும் எப்பொழுதும் வேறு வேறானதே.
தேஹம் வேறு - தேஹி வேறு என்ற அறிவு . உடலில் இருந்து உடலை இயக்குவது எதுவோ அது உடலுக்கு வேறானது (ஸூக்ஷ்ம சரீரம்). சூக்ஷ்ம உடலும் இயங்கக் காரணமானது எதுவோ அது அதற்கும் வேறானது (ஆத்மா). தூல உடல், சூக்கும உடல் இரண்டுக்கும் காரணமான காரண உடல், என மூன்று உடல்கள் உள்ளன. இவை மூன்றிற்கும் வேராக உள்ளது ஆத்மா.
இதை உணர்த்த நாள் தோறும் அனுபவிக்கும் மூன்று அவஸ்தை நிலைகளை உதாரணமாக விளக்குகிறார். விழிப்பு நிலை, கனவு நிலை, உறக்க நிலை இதை உடலுக்கு வேறாக ஒருவன் இருக்கிறான் என்பதாலேயே உணரமுடிகிறது
No comments yet. Be the first to say something!